உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1200 ஆண்டுகள் பழமையான தவ்வை சிற்பம் கண்டெடுப்பு

1200 ஆண்டுகள் பழமையான தவ்வை சிற்பம் கண்டெடுப்பு

கோட்டக்குப்பம்; விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், தந்திராயன்குப்பம் மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணியால், கோவிலில் இருந்த சிலைகள் வெளியே வைக்கப்பட்டுள்ளன. இதில், பழமையான சிற்பம் ஒன்று இருப்பதாக கிராம தலைவர் மணி, தொல்லியல் ஆய்வாளர் சங்க தலைவர் மணியன் கலியமூர்த்திக்கு தெரிவித்தார். அவரது தலைமையிலான குழுவினர், அந்த பகுதியில் தொல்லியல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள வேப்பமரத்தடியில் வைக்கப்பட்டிருந்த மூத்த தேவி எனப்படும் தவ்வை சிற்பம் இருப்பதை கண்டு, அதை ஆய்வு செய்தனர்.


மணியன் கலியமூர்த்தி கூறியதாவது: 3 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக உள்ள மூத்த தேவியின் தலை கரண்ட மகுடத்துடன், காதில் மகர குண்டலம் அணிந்து, கழுத்து ஆபரணங்களுடன், தோல் வளைவிகளும், கைகள், கால்களில் அழகிய அணிகலன்களுடன் காணப்பட்டது. மேலும், 1,200 ஆண்டுகள் பழமையான தமிழ் இனத்தின் தாய் தெய்வ வழிபாட்டில் மூத்ததேவி எனப்படும் இந்த தவ்வை பொதுவாக வேளாண்மை மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் கடவுளாக வழிபட்டதாக சங்க இலக்கியங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !