உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் துவக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் துவக்கம்

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.


அன்று காலை 7:00 மணிக்கு அனுக்ஞை பூஜை, யாகசாலை பூஜை முடிந்து, உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்படும். காலை 9:00 மணிக்கு மேல் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். திருவிழா நடைபெறும் நாட்களில் தினம் காலை 8:30 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜையும், காலை 11:00, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனையும், இரவு 7:00 மணிக்கு தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறு முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். வேல் வாங்குதல்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக். 26 மாலை 6:30முதல் இரவு 7:30 மணிக்குள் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் ஆலயப் பணியாளர்கள் திருக் கண்ணில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அக். 27ல் சூரசம்ஹார லீலை, அக். 28 காலையில் கிரி வீதி, ரத வீதிகளில் சிறிய வைரத் தேரோட்டம், மாலை 4:00 மணிக்கு மூலவர்களுக்கு தைல புண்ணியாக வாசனமாகி பாவாடை நைவேதன தரிசனம், தீபாராதனை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !