உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் அய்யனார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

விருத்தாசலம் அய்யனார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

விருத்தாசலம்: ராஜேந்திரபட்டினம் அய்யனார் கோவில் மண்டல பூஜை நிறைவு விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமம் அய்யனார் கோவில் கும்பாபி ேஷகம் கடந்த மாதம் 4ம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து தினசரி மாலை 6:00 மணிக்கு சுவாமிகளுக்கு மண்டல பூஜை விழா நடந்து வந்தது. நேற்று முன்தினம் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, சிறப்பு யாகம் நடந்தது. அய்யனார், மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்கரத்தில் அருள்பாலித்தனர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !