உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் 6ம் நாள் விழா

உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் 6ம் நாள் விழா

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவத்தின் 6ம் நாளான இன்று சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், மணவாள மாமுனிகள் விழாவின் 6ம் நாளான இன்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 6:45 மணி முதல் 8:45 மணி வரை நித்திய பூஜை, தொடர்ந்து மணவாள மாமுனிகள் சன்னதியில் இருந்து எழுந்தருளி பெருமாள், தாயார், வேணுகோபாலன் சன்னதியில் மங்களா சாசனம், 11:00 மணிக்கு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மணவாள மாமுனிகள் எழுந்தருளி சன்னதி உலா, தொடர்ந்து நான்காயிர திவ்ய பிரபந்த சேவை, திருவாராதனம். 7:30 மணிக்கு சாற்றுமரை, பிரசாத விநியோகம் நடைபெற உள்ளது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !