உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் 6ம் நாள் விழா
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவத்தின் 6ம் நாளான இன்று சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், மணவாள மாமுனிகள் விழாவின் 6ம் நாளான இன்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 6:45 மணி முதல் 8:45 மணி வரை நித்திய பூஜை, தொடர்ந்து மணவாள மாமுனிகள் சன்னதியில் இருந்து எழுந்தருளி பெருமாள், தாயார், வேணுகோபாலன் சன்னதியில் மங்களா சாசனம், 11:00 மணிக்கு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மணவாள மாமுனிகள் எழுந்தருளி சன்னதி உலா, தொடர்ந்து நான்காயிர திவ்ய பிரபந்த சேவை, திருவாராதனம். 7:30 மணிக்கு சாற்றுமரை, பிரசாத விநியோகம் நடைபெற உள்ளது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.