குன்றத்துார் கோவிலில் கந்தசஷ்டி விழா விமரிசை
ADDED :11 minutes ago
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.
குன்றத்துார் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை லட்சார்ச்சனை நடந்து வருகிறது. இன்று கந்தழீஸ்வரர் கோவிலில் வேல் வாங்கும் விழாவும், நாளை சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளான நேற்று, சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.