கோவை ராம்நகர் ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு அன்னபிஷேகம்
ADDED :1 days ago
கோவை ; ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கோவை ராம்நகர் கோதண்டராம சுவாமி கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரர் சன்னதியில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை, அன்னபிஷேகம் நடந்தது. இதில் காய் கனி மற்றும் நவதானிய பொருட்கள். இனிப்பு கார வகைகளுடன் நந்தி பகவான் சொரூபமாக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.