வெங்கலமுடை அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
ADDED :3 hours ago
மேலூர்; கொட்டகுடியில் கற்குடைய, சின்ன, வெங்கலமுடை அய்யனார் கோயில் ஐப்பசி மாத புரவி எடுப்பு திருவிழா இன்று நடந்தது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவில் இன்று குதிரை பொட்டலிலிருந்து மந்தைக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டது. இரண்டாம் நாள் ஆன நாளை (நவ. 12) மந்தையிலிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டு கிடா வெட்டி பொங்கல் வைக்கப்படும். நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்க பெற்றவர்கள் பதுமை, நாகம் உள்ளிட்ட சிலைகளை சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்துவர். எல்லா வளமும் கிடைக்க வேண்டி இத்திருவிழா கொண்டாடுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர். திருவிழாவில் கொட்டகுடி, அரசப்பன் பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வர்.