திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் திறப்பு
ADDED :51 minutes ago
திருவாடானை: திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று 9 பிரார்த்தனை உண்டியல்கள் திறக்கப்பட்டது. அதில் ரொக்கம் ரூ.26 லட்சத்து 57 ஆயிரத்து 740, தங்கம் 122 கிராம், வெள்ளி 835 கிராம் இருந்தது. ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் சண்முகசுந்தரம், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன், சரக ஆய்வாளர் கண்ணன் மற்றும் திருவெற்றியூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.