உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  சபரிமலை பக்தர்கள் வசதிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 சபரிமலை பக்தர்கள் வசதிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சேலம்: சபரிமலை பக்தர்கள் வசதிக்கு, சேலம் வழியே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மசூலிப்பட்டணம் – கொல்லம் சிறப்பு வார ரயில், டிச., 5, 12, 19, ஜன., 9, 16 ஆகிய வெள்ளி காலை, 11:00 மணிக்கு புறப்பட்டு, விஜயவாடா, கடப்பா, ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர் வழியே மறுநாள் இரவு, 10:00 மணிக்கு கொல்லத்தை அடையும். காலை, 8:30 மணிக்கு சேலம், 9:35க்கு ஈரோடு வந்து செல்லும்.


மறுமார்க்க ரயில், டிச., 7, 14, 21, ஜன., 11, 18 ஆகிய ஞாயிறு அதிகாலை, 2:30 மணிக்கு கிளம்பி, அடுத்தநாள் மதியம், 12:30க்கு மசூலிப்பட்டணத்தை அடையும். மதியம், 1:15க்கு ஈரோடு, 2:22க்கு சேலம் வந்து செல்லும். அதேபோல் சார்லபள்ளி – கொல்லம் சிறப்பு வார ரயில், வரும், 17 முதல், ஜன., 19 வரை, திங்கள் மதியம், 12:00 மணிக்கு புறப்பட்டு, குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர் வழியே அடுத்தநாள் இரவு, 10:00 மணிக்கு கொல்லத்தை அடையும். காலை, 8:30க்கு சேலம், 9:35க்கு ஈரோடு வந்து செல்லும். மறுமார்க்க ரயில், நவ., 19 முதல், ஜன., 21 வரை புதன் அதிகாலை, 2:30 மணிக்கு கிளம்பி, மறுநாள் காலை, 10:30க்கு சார்லபள்ளியை அடையும். மதியம், 1:15க்கு ஈரோடு, 2:22க்கு சேலம் வந்து செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !