உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடியில் இருந்து சுவாமி மலைக்கு பக்தர்கள் காவடி

காரைக்குடியில் இருந்து சுவாமி மலைக்கு பக்தர்கள் காவடி

காரைக்குடி; திருக்கார்த்திகையை முன்னிட்டு காரைக்குடியில் இருந்து சுவாமி மலைக்கு பக்தர்கள் காவடி எடுத்துச் சென்றனர்.


காரைக்குடியில் இருந்து ஆண்டுதோறும் திருக்கார்த்திகைக்கு, நகரத்தார் சுவாமிமலை பாதயாத்திரை டிரஸ்ட் மூலம் பக்தர்கள் காவடி எடுத்துச் செல்வது வழக்கம். இவ்வாண்டு திருக்கார்த்திகையை முன்னிட்டு காவடி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நவ.26 காரைக்குடி நா. புதூர் நாகநாத சுவாமி கோயிலில், விநாயகர் பானை வைத்து காவடி கட்டுதல் நிகழ்ச்சியும் வேல் பூஜையும் நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணியர், தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை காவடிகள் நகர்வலம் வந்து கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் காவடிகளை வைத்து வேல் பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், காவடிகள் சுவாமி மலைக்கு புறப்பட்டது. வரும் டிச.1 ஆம் தேதி காலை, சுவாமிமலையில் காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !