உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய் கங்காதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா

சாய் கங்காதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா

விழுப்புரம்: மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள சாய் கங்காதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.


விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தில் கங்கையம்மன் உடனுறை சாய் காங்காதீஸ்வரர் கோவில் உள்ளது.


கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகத்தை யொட்டி, அதிகாலை 4:00 மணிக்கு கலச ஆராதனை, கோ பூஜை, மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம் நடந்தது.


தொடர்ந்து 5:30 மணி க்கு பூர்ணாஹூதி, தீபாராதனை, 6:00 மணிக்கு கடம் புறப்பாடு, யாத்ரதானம், 6:15 மணிக்கு விமானம் மற்றும் சுவாமி கும்பாபிஷேகம், பின் அலங்காரம் மகா மங்கயா ஆரத்தி நடந்தது.


கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !