உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம்

செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம்

செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.


செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை மகா தீப உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு 15ஆம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், கொடியேற்றமும் நடந்தது. இரவு 7 மணிக்கு ருத்ர ஹோமமும், உற்சவர் கோயில் உலாவும் நடந்தது. நேற்று இரவு 7 மணிக்கு பைரவர் ஹோமம், சொர்ணாகர்ஷணமும், உற்சவர் கோயில் உலாவும் நடந்தது. இன்று அதிகாலை 4.00 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். நேற்று மாலை 5 மணிக்கு அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடந்தன. 6 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். இதில் அறங்காவலர் இந்திரா ரவிச்சந்திரன், விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !