உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் இடத்தில் பறக்கும் கொடி திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சை

கோவில் இடத்தில் பறக்கும் கொடி திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சை

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் மலையில், கோவில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில், பிறை நிலா போட்ட கொடி புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதை அகற்ற, சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகத்திடம், ஹிந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்தனர்.


ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன் அளித்தமனு: கோவில் மலை மீது பழமையான தலைவிரிச்சான் மரம் என்று அழைக்கப்படும் கல்லத்தி மரம் உள்ளது. இங்கிருந்து, 100 மீட்டருக்கு மேல் தர்கா உள்ளது. சந்தனக்கூடு விழாவின்போது, ஆண்டுக்கு ஒருமுறை தர்காவுக்கு உள்ளே உள்ள கொடிமரத்தில் தான் பிறை நிலா போட்ட சிவப்புக்கொடி ஏற்றப்படும். தற்போது, கல்லத்தி மரத்திலும் பிறை நிலா போட்ட கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், மகா தீபம் ஏற்ற ஆட்சேபனை தெரிவிக்காத தர்கா நிர்வாகத்திற்கு கட்சி சார்பில் நன்றி. அதே சமயம், கோவில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தை ஆக்கிரமிக்கும் நோக்கோடு தர்கா நிர்வாகம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. டிச., 21ல் சந்தனக்கூடு விழாவில் கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை இறக்கி மீண்டும் ஏற்ற, தர்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதை காரணம் காட்டி, மரமும் தர்கா நிர்வாகத்திற்கு சொந்தம் என உரிமை கொண்டாடும் விதமாக வருங்காலத்தில் சர்ச்சையாகவும், பிரச்னையாகவும் மாற வாய்ப்புள்ளது. எனவே கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை துவக்க நிலையில் உடனே அகற்ற வேண்டும். மரத்தில் சேவல் படம் போட்ட கொடியை ஏற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !