உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா தீபம் ஏற்றிய அருணாசலேஸ்வரர் மலைமீது பிராயச்சித்த அபிஷேகம்

மஹா தீபம் ஏற்றிய அருணாசலேஸ்வரர் மலைமீது பிராயச்சித்த அபிஷேகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத் திருவிழா முடிந்ததை யொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிராயச்சித்த  தீர்த்தத்தை  2,668 அடி அண்ணாமலையார் மலை உச்சியில்,  கொப்பரை வைத்து மஹா தீபம் ஏற்றும் இடத்தில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது.


திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள மலையையே, சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவில் கடந்த, 3ம் தேதி 2,668 அடி உயர, மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தீபம், 11 நாட்கள் எரிந்தது. இந்நிலையில், மலை மேல் ஏறியதற்கு, பிராயச்சித்த பரிகார பூஜை நடந்தது. மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபடுவதால், பக்தர்கள் மலை மேல் ஏறியதற்கு, பிராயசித்த பரிகார பூஜை இன்று நடந்தது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சிறப்பு யாக சாலை பூஜை நடத்தப்பட்டு, அதன் கலச நீரை, அண்ணாமலையார் மலை உச்சிக்கு கொண்டு சென்று, அருணாசலேஸ்வரர் சுவாமி பாதத்தில், பிராயச்சித்த அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !