பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்: 2 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம்
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
புதுச்சேரி – திண்டிவனம் சாலையில், பஞ்ச வடீயில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா, கடந்த 15ம் தேதி மாலை அனுக்ஞை , மகா சங்கல்பம், புண்யா ஹவாசனம் மற்றும் வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. நான்காம் நாளான நேற்று காலை 5ம் காலயாக பூஜையும், மாலை 6ம் கால யாக பூஜை, புண்யாஹ வாசனம், பஞ்சஸூக்த ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி, சாற்று முறை, லட்சார்ச்சனை நடந்தது. இன்று, அனுமன் ஜெயந்தியையொட்டி, காலை 7:00 மணிக்கு யஜமான மகா சங்கல்பங்கள், புண்யாஹவாசனம், பஞ்சஸூக்த ஹோமம், மூலமந்திர ேஹாமம், லட்சார்ச்சனை பூர்த்தி நடைபெற்றது. தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களுடன், மூலவரான 36 அடி உயர ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, ஏழாம் காலயாக பூஜை பூர்த்தியாகி கடம் புறப் பாடாகி, கோவிலை வலம் வந்து அபிஷேகம் நடைபெற்றது. பின், சுவாமிக்கு அலங்காரத்திற்கு பின், ஆஞ்ச நேயருக்கு 130 கிலோ ஏலக்காய் மாலை சாற்றப்பட்டு, புஷ்ப விருஷ்டி வேத கோஷம், சோடச உபசாரம் நடந்தது. முன்னதாக காலை 10:00 மணி முதல் தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் மற்றும் முரளி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு யாழ்ப்பாணம் பாலமுருகன் மற்றும் குமரன் குழுவி னரின் மங்கள இசையுடன், சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.