திருமலை திருப்பதியில் அத்யயனோத்ஸவம் கோலாகலமாக துவங்கியது
திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் 25 நாள் அத்யயனோத்ஸவம் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ரங்கநாயகுலா மண்டபத்தில் இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை அத்யயனோத்ஸவம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தனுர்மாசத்தின் போது வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 11 நாட்கள் இறைவன் சன்னதியில் அத்யயனோத்ஸவம் நடத்துவது மரபு. இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ வைஷ்ணவ ஜீயர்கள் 12 ஆழ்வார்கள் இயற்றிய திவ்ய பிரபந்த கீர்த்தனைகளை பாடி, இறைவனின் மகிமையை போற்றுவார்கள். இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயர் சுவாமி, திருமலை ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகள், ஸ்ரீவாரி கோயில் துணை இஓ ஸ்ரீ லோகநாதம், அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அத்யயனோத்ஸவம் என்பது என்ன?; அத்யயனம் என்றால் படித்தல், ஆராய்தல் என்று பொருள். அதாவது, ஆழ்வார் பெருமாளின் திருநாமங்களை பக்தியுடன் பாடிக் கொண்டாடுவது தான் அத்யயனோற்சவம். இந்த 25 நாட்கள் பகல்பத்து மற்றும் இரப்பத்து என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய முதல் 11 நாட்கள் பகல் பத்து என்றும், மீதமுள்ள 10 நாட்கள் இரப்பத்து என்றும் அழைக்கப்படுகிறது. 22வது நாள் – கண்ணினுன் சிறுத்தாம்பு, 23 வது நாள் – இராமானுஜ நூற்றிரண்டாதி, 24 வது நாள்– ஸ்ரீவராகஸ்வாமிவாரின் சாத்துமோர கொண்டாடப்படுகிறது.