உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனம்; நடராஜருக்கு ‘மஹா தீப மை’ சாற்றி வழிபாடு

திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனம்; நடராஜருக்கு ‘மஹா தீப மை’ சாற்றி வழிபாடு

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், நடராஜ சுவாமிக்கு ‘மஹா தீப மை’ சாற்றப்பட்டு வழிபாடு நடந்தது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்  கோவிலில்,  ஆருத்ரா தரிசன விழா இன்று நடந்தது.  இதையொட்டி நேற்று இரவு, சன்னதியிலிருந்து நடராஜர், சிவகாமசுந்தரி புறப்பாடு நடந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். இன்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர்  மற்றும் உண்ணாமுலையம்மனுக்கும், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கும்,  சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. அப்போது கடந்த டிச., 3ல், அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மஹா தீப  கொப்பரையில் சேகரிக்கப்பட்ட ‘தீப மை’, நடராஜர் மற்றும்  சிவகாமசுந்தரி அம்மனுக்கும் முதலில் சாற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என கோஷமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து திருமஞ்சன கோபுர வாயில் வழியாக நடராஜர், சிவகாம சுந்தரி அம்மன் மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !