உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மத நல்லிணக்க பொங்கல் விழா: ஹிந்து முஸ்லிம்கள் இணைந்து கொண்டாட்டம்

மத நல்லிணக்க பொங்கல் விழா: ஹிந்து முஸ்லிம்கள் இணைந்து கொண்டாட்டம்

மேலூர்; மேலூர், தும்பைபட்டியில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு வீரகாளி அம்மன் கோயில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து மத நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடினர்.


இவ் விழாவை முன்னிட்டு புதிய ஜவுளிகள் வாங்க கிராமத்து சார்பில் பணம் வசூலிக்கப்பட்டு இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த தரகன் வகையறாவிடம் ஒப்படைக்கப்பட்டு ஜவுளிகள் வாங்கப்பட்டது. புதிதாக வாங்கப்பட்ட ஜவுளிகள் கிராமத்து பெரியவர்கள் முன்னிலையில் பெரிய மந்தையில் வைத்து அனைவரும் சுவாமி கும்பிட்டனர். அதனை தொடர்ந்து தரகன் வகையறாவை சேர்ந்தவர் புதிய ஜவுளிகளை வீரகாளியம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு புதிய ஜவுளிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அம்மன் மற்றும் கோயில் மாட்டுக்கு அணிவிக்கப்பட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. அதற்கு முன்பாக மத நல்லிணக்க பொங்கல் வைக்கப்பட்டு கோயிலில் ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து சுவாமி கும்பிட்டனர். ஜாதி மத பேதமில்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடுவதாக கிராமத்தார்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !