உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில் சகஸ்ர கலசாபிஷேகம் விமரிசை

ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில் சகஸ்ர கலசாபிஷேகம் விமரிசை

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில் ராமர் பிறந்த நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில், தை மாதத்தில் சகஸ்ர கலசாபிஷேக பெருவிழா நடந்தது.


இதில், 30 ஆண்டுகளுக்குப் பின், 1,001 கலசங்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் நீர் சேகரித்து கங்கை, காவிரி, நர்மதை, பாலாறு போன்ற புண்ணிய நதிகளாக பாவித்து உலக நன்மை க்காகவும், ஆன்மீக பலனுக்காகவும் அபிஷேகம் நடத்தப்பட்டது.


மாலை 6:00 மணிக்கு, ஏரிகாத்த கோதண்டராமர், ஜெனகவல்லி தாயார் வைர முடி சேவையில் காட்சியளித்தார். அன்னக்கூடை உத்சவமும் நடந்தது. இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


வைரம் பதித்த தாலி


சகஸ்ர கலசாபிஷேக விழாவை ஒட்டி, உபயதாரர் மூலமாக 85 லட்சம் ரூபாயில், 143 வைரக் கற்கள் பதித்த மற்றும் 550 கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட தாலி, மூலவர் சன்னிதியில் உள்ள ஜெனகவல்லி தாயாருக்கு சாற்றப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !