உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரமுருகன் கோவிலில் தைபூசம் தேர் ஊர்வலம்: பக்தர்கள் தரிசனம்

குமரமுருகன் கோவிலில் தைபூசம் தேர் ஊர்வலம்: பக்தர்கள் தரிசனம்

கூடலூர்; கூடலூர் குசுமகிரி அருள்மிகு ஸ்ரீ குமரமுருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. 7:30 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சியும், 8:00 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் நடந்தது. 9:00 மணிக்கு சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், 10:00 சிறப்பு அலங்கார பூஜையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:00மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 6:15 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை, கூடலூர் ஆர்.டி.ஒ., குணசேகரன், இஸ்பெக்டர் ராஜந்திர பிரசாத் துவக்கி வைத்தனர். ஊர்வலம், மேல் கூடலூர் மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், சக்தி முனீஸ்வரன் கோவில், பட்ட துளசி அம்மன் கோவில், எஸ்.எஸ்., நகர் நாகராஜா கோவில் மற்றும் முக்கிய சாலை வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !