உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 101 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம்

101 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம்

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே கோடதாசனூரில், ராயர் சுவாமி கோயிலில், கல்யாண சுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது. தைப்பூச விழாவின் ஒரு பகுதியாக நேற்று, கோடதாசனூர், மங்கலகரைபுதூர், டி.ஜி. புதூர், காந்திநகர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 101 பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலை அடைந்தனர்.


கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !