சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை
ADDED :1 days ago
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை நடைபெற்றது. திரளாக பங்கேற்ற பெண்கள் மஞ்சளில் விநாயகர் சிலையை பிடித்து, அதற்கு ஒவ்வொரும் பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து விளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையை முன்னிட்டு காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.