உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடையூர் கொசஸ்தலை ஆற்றில் 12 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

விடையூர் கொசஸ்தலை ஆற்றில் 12 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

விடையூர்: விடையூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் கண்டெக்கப்பட்ட, அம்மன் மற்றும் சுவாமி சிலைகளை மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


கடம்பத்துார் ஒன்றியம், விடையூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் சுவாமி சிலைகள் கிடப்பதாக பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர். கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் அளித்த தகவலின்படி வருவாய் துறையினர் மற்றும் தாலுகா போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். பின் அம்மன் மற்றும் சுவாமி என, 12 சிலைகளையும் மீட்டு திருவள்ளூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் சத்தரை, பிஞ்சிவாக்கம் ஆகிய பகுதி கூவம் ஆற்றில், இது போன்று, 55 சுவாமி சிலைகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !