உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை சோமநாதர் கோயிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம்

மானாமதுரை சோமநாதர் கோயிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம்

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி வைரத்தேருக்கு 22ம் தேதி வெள்ளோட்ட விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று கோயிலில் யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் 60 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடைபெறும் போது 2 பெரிய தேர்களில் தனித்தனியாக சுவாமியும், அம்மனும் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்தனர். இதில் சோமநாதர் தேர் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து தற்போது அம்மன் சென்ற பெரிய தேரில் சோமநாதர் சுவாமியும், அதற்குப் பின்னால் ஒரு சிறிய தேரில் அம்மனும் தேரோட்ட விழாவின்போது வீதி உலா வருகின்றனர். சோமநாதர் சுவாமிக்கு புதிய தேர் செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து புதிதாக தேர் செய்யும் பணி முடிந்துள்ளது. தேருக்கான பிரதிஷ்டை, வெள்ளோட்ட விழா, தேரடி கருப்பன் கோயில் கும்பாபிஷேக விழா பிப். 22ம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக இன்று காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.நாளை22ம் தேதி காலை 9:45 மணிக்கு ரத பிரதிஷ்டையும், 11:00 மணிக்கு புதிய வைர தேர் வெள்ளோட்ட விழாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியார்கள்,பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !