கோமாளி அரங்கன் கோவில் பாதயாத்திரை விழா
ADDED :12 hours ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே, வீரபாண்டி மாரியம்மன் கோவில் ஸ்ரீ ராமர் பஜனை குழுவினரின் கோமாளி அரங்கன் கோவில், 40ம் ஆண்டு பஜனை பாதயாத்திரை விழா நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் சீதாராமர் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோமாதா வழிபாடு, ஆண்டாள் ரங்கமன்னார், திருமலைராய பெருமாள், சர்வ சக்தி சித்தி விநாயகர் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி, பஜனை யாத்திரை, கோமாளி அரங்கன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம், மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.