லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை
காஞ்சிபுரம்: பள்ளி மாணவ – மாணவியர் அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்காக, காஞ்சிபுரம் லட்சுமி ஹயக்ரீவர் சன்னிதியில் நேற்று லட்சார்ச்சனை நடந்தது.
காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள துாப்புல் பரகால மடத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு என, தனி சன்னிதி உள்ளது.
இங்கு ஆண்டுதோறும், உலக நன்மைக்காகவும், மாணவ – மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவும், கல்வி அபிவிருத்திக்காக கல்வி கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான லட்சார்ச்சனை நேற்று நடந்தது. இதில், பரகால மடத்தில் உள்ள கல்வி கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு நேற்று காலை 8:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரையும் லட்சார்ச்சனை நடந்தது.
இதில், திரளான பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியர் பெற்றோருடன் பங்கேற்று சுவாமிக்கு அர்ச்சனை செய்து, பேனா, பென்சில், நோட்டுப்புத்தகம் உள்ளிட்டவற்றை சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து வழிபட்டனர்..