உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்தபுரம் சிங்கபெருமாள் கோவிலில் தெப்பம் கட்டும் பணி விறு விறு

அனுமந்தபுரம் சிங்கபெருமாள் கோவிலில் தெப்பம் கட்டும் பணி விறு விறு

 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் அருகில் சுத்த புஷ்கரணி குளம் உள்ளது. இதில் ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவம் ஐந்து நாட்கள் நடைபெறும். உற்சவர் பிரகலாதவரதர், அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வருவார். இந்த ஆண்டு தெப்ப உற்சவம் வரும் 1ம் தேதி மாலை துவங்கி ஐந்து நாட்கள் நடத்தவும், ஐந்து நாட்கள் தவன உற்சவம் நடத்தவும், கோவில் உபயதாரர்கள் மற்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக, மதில் சுவர்களில் வண்ணம் பூசுதல் மற்றும் குளத்தில் புதிய தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !