உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பில்லி, சூனியம், மாந்திரீகம் நீக்கும் ஜிகனி எல்லம்மா கோவில்

பில்லி, சூனியம், மாந்திரீகம் நீக்கும் ஜிகனி எல்லம்மா கோவில்

பெங்களூரு ரூரல் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனியில் உள்ளது எல்லம்மா கோவில். எல்லம்மா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில் பக்தர்களின் பில்லி, சூனியம், மாந்திரீகத்தை நீக்கும் இடமாக உள்ளது. கோவிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர்.


தங்கள் குடும்பத்தில் யாருக்காவது பிரச்னை, கணவன், மனைவி இடையே சண்டை, தங்கள் மீது யாரோ தீயசக்திகளை ஏவி விட்டு இருப்பதாக உணரும் பக்தர்கள், கோவிலை தொடர்பு கொண்டு பேச வேண்டும்.


கோவிலுக்கு சென்ற பின், யாருக்கு பிரச்னை உள்ளதோ அவர்கள், மாரம்மா தேவி சிலை முன்பு நேருக்கு, நேராக அமர வைக்கின்றனர். உடலில் பிரச்னை இருந்தால், அம்மன் பார்வை பட்டதுமே, தானாக உடல் நடுங்க ஆரம்பிக்கும். சிறிய பிரச்னையாக இருந்தால் உடனே தீரும். சக்தி வாய்ந்த தீயசக்திகளை ஏவி விட்டு இருப்பது தெரிந்தால், நான்கு நாட்கள் கோவிலில் தங்க வைக்கின்றனர்.


நான்கு நாட்களுக்கு பின், உடலை குணப்படுத்தி அனுப்புகின்றனர். தீராத தலைவலி, கை, கால் வலியால் அவதிப்படும் பக்தர்கள், இங்கு வந்து, மாரம்மாவை தரிசித்து சென்றால், அனைத்து வலியும் நீங்கி விடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலுக்கு ஆனேக்கல் மட்டுமன்றி ஹொஸ்கோட், சூர்யாநகர், பாகலுார், தமிழகத்தின் ஓசூரில் இருந்தும் அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். தொடர்புக்கு: 99457 44839.


எப்படி செல்வது?


* மெஜஸ்டிக்கில் இருந்து ஜிகனி 40 கி.மீ., துாரத்தில் உள்ளது.

* பி.எம்.டி.சி., பஸ்சில் சென்றால் 365ஜே மற்றும் 365வி பஸ்களில் செல்லலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !