கரி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவ விழா துவக்கம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில், 21ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா இம்மாதம், 27ம் தேதி முதல் ஏப்.,5ம் தேதி வரை நடக்கிறது.
விழாவை ஒட்டி இம்மாதம், 26ம் தேதி கிராம சாந்தி நடக்கிறது. 27ம் தேதி கொடியேற்றமும், மாலை அன்ன வாகனமும் நடக்கிறது. 28ம் தேதி யோக நரசிம்ம அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். இதேபோல, 29ம் தேதி முத்தங்கி அலங்காரம், முத்து பந்தல் நிகழ்ச்சியும், 30ம் தேதி ஸ்ரீராம அலங்காரம், அனுமந்த வாகனத்திலும், 31ம் தேதி வைரமுடி சேவை, கருட வாகன அலங்காரத்திலும், ஏப்., 1ம் தேதி திருக்கல்யாண உற்சவம், யானை வாகனம், 2ம் தேதி மாலை திருத்தேர் நிகழ்ச்சி, 3ம் தேதி குதிரை வாகனம், பரிவேட்டை, 4ம் தேதி சேஷ வாகனம், தெப்ப தேர் நடக்கிறது. 5ம் தேதி பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி சாற்று முறை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவை ஒட்டி பத்து நாட்களும் கோவில் வளாகத்தில் திவ்ய பிரபந்த சேவா காலம் மதியம், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.