ராமநவமி: நாக்பூரில் உலக சாதனை படைத்த பிரம்மாண்ட மஹா ஆரத்தி நிகழ்ச்சி
ADDED :2 days ago
நாக்பூர் : நாக்பூர் மாவட்டம் சவ்னரில் பிரம்மாண்ட மஹா ஆரத்தி கின்னஸ் உலக சாதனை படைத்தது.
நாக்பூர் மாவட்டம் சவ்னரில் ராமநவமியை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க மஹா ஆரத்தி பக்தி மயமாக நடைபெற்றது. இன்று ராமநவமியை முன்னிட்டு, மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டம் சவ்னரில் ஒரே நேரத்தில் 4900 பேர் சேர்ந்து பிரம்மாண்ட மஹா ஆரத்தி செய்தது கின்னஸ் உலக சாதனை படைத்தது. இது அக்டோபர் 2025ல் அயோத்தியில் படைக்கப்பட்ட சாதனையை முறியடித்து, உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கலந்து கொண்டு ராமநாமம் சொல்லி மஹா ஆரத்தி செய்தது பிரமிக்க வைத்தது.