உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோயில் பங்குனி பிரமோற்சவம் துவக்கம்

கோதண்டராமர் கோயில் பங்குனி பிரமோற்சவம் துவக்கம்

தேவகோட்டை; தேவகோட்டையில் உள்ள கோதண்டராமர் ஸ்வாமி கோயில் பங்குனி பிரமோற்சவம் 11 நாட்கள் நடைபெறுகிறது. இத்திருவிழா இன்று 12 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பாலாஜி பட்டர் தலைமையில் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி சுற்றி வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவிழா கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோதண்டராமர் ஸ்வாமி, சீதா பிராட்டி, லட்சுமணர் ஆகியோருக்கு மூலவர்களுக்கும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரத்தில் விசேஷ பூஜைகள் நடந்தன. மாலையில் விழாவையொட்டி முன்னிட்டு சுவாமிக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்து பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ராமபிரான், சீதை, லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் ஏகாந்த சேவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏப். 1 ந்தேதி திருக்கல்யாணம், ஏப். 4 ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !