மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நேற்றிரவு நடந்தது.
மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர பெரு விழாவையொட்டி, நேற்று 23ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி வெள்ளி நாக, தங்க மயில் வாகனத்தில் உற்சவர் உலா வந்து அருள்பாலித்தார். நேற்று இரவு வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் மலை வலக்காட்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று காலை 6:00 மணிக்கு நடக்கிறது. நாளை 1ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்த வாரி உற்சவமும், தொடர்ந்து இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது. 2ம் தேதி முத்து பல்லக்கில் சுவாமி கிரிவலம் நடக்கிறது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.