திருத்தணி முருகன் கோவிலுக்கு 2 நாட்கள் வாகனம் செல்ல தடை
திருத்தணி: அரசு விடுமுறை மற்றும் பங்குனி உத்திரம் என்பதால், இன்றும், நாளையும் திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். இதன் காரணமாக, இரு நாட்களுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் படுகிறது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இன்று மகாவீர் ஜெயந்தி என்பதாலும், நாளை பங்குனி உத்திர விழா என்பதாலும், முருகன் மலைக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். எனவே, பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோவில் படாசெட்டி குளத்தில் இருந்து மலைக்கோவில் நுழைவு பாதை வரை, இரு நாட்களும் 10 இலவச சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இன்றும், நாளையும் இருசக்கர வாகனங்களை தவிர, மற்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், ‘கார்கள் மட்டும் படாசெட்டிகுளத்தில் இடவசதிக்கு ஏற்ப அனுமதிக்கப்படும்’ என, கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்தார்.