மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :23 hours ago
கோவை: பங்குனி மாதம் பௌர்ணமி திதியை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சர்வ அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது