ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் பவுர்ணமி விழா விமரிசை
ADDED :1 hours ago
செங்கல்பட்டு : மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், ராகவேந்திரா சு வாமிகள் பிருந்தாவனம் உள்ளது. இங்கு, மாதந்தோறும் பவுர்ணமி விழா விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி பங்குனி மாத பவுர்ணமி விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது. பின், யாகம் வளர்த்து, மஹாதீப ஆராதனை நடந்தது. இதில், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து, திரண்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.