காணும் பொங்கல் கோலாகலம் !
ADDED :4814 days ago
சென்னை:காணும் பொங்கல் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான புதனன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையடுத்து சென்னை மெரீனா உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் கன்னியாகுமரியில் அதிகாலையில் படகு போக்குவரத்து துவங்கியது. சுற்றுலா பயணிகள் , விவேகானந்தர் மண்டபம் செல்ல குவியத்துவங்கியுள்ளனர்.