கருவலுார் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் அம்மன் தரிசனம்: அன்னவாகன காட்சி
ADDED :20 minutes ago
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; 28ம் தேதி கொடியேற்றம், வாகன காட்சிகள்; 30ம் தேதி மலர் பல்லாக்கு, அம்மன் அழைப்பு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடந்த 1, 2, 3ம் தேதிகளில் அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் மூன்று நாட்கள், தேர் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்த்தனர். நேற்று முன்தினம், பரிவேட்டை, குதிரைவாகன காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகன காட்சியும் நடந்தது. நேற்று காலை, சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் தரிசனம் நடைபெற்றது. மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்; இரவு மஞ்சள் நீர் விழாவும், அன்னவாகன காட்சியும் நடந்தது. வரும், 8 ம் தேதி மறுபூஜையும், அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.