கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா
ADDED :20 minutes ago
கீழ்நல்லாத்துார்: கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம் கீழ்நல்லாத்துார் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஜாத்திரை திருவிழா கடந்த 24ம் தேதி துவங்கியது. பின் 27ம் தேதி காலை கொடியேற்றம் நடந்தது. பின் 28ம் தேதி சனிக்கிழமை பெருமாள் உத்சவமும் 29ம் தேதி இரவு எல்லையம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, நேற்று காலை காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்த எல்லையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 12ம் தேதி விடையாற்றி உத்சவத்துடன் ஜாத்திரை திருவிழா நிறைவடைகிறது.