கிருபானந்த வாரியார்: ஆசையைக் குறைத்தால்....
* நிம்மதியாக வாழ விரும்பினால் ஆசையைக் குறை.
* சஷ்டி விரதம் இருந்தால் சகல வளமும் உண்டாகும்.
* நல்ல எண்ணம் இருக்கும் மனமே கடவுளின் கோயில்.
* அடியார்களை வணங்கினால் கடவுளின் அருளை பெறலாம்.
* மகான்களின் உபதேசம் கேட்பது காது வழியாக சாப்பிடும் உணவு.
* நீதி நுால்களை படித்தால் ஒழுக்கம் தானாக வரும்.
* திருக்குறளை படித்தால் வாய் மணக்கும்; கேட்டால் காது மணக்கும்.
* கலியுகத்தில் பக்தி செய்தால் மோட்சம் பெறலாம்.
* உடற்பயிற்சியால் உடலும், தியானத்தால் மனமும் வலிமை பெறும்.
* சிரித்த முகத்துடன் பழகு. மகிழ்ச்சி பொங்கும்.
* உன்னுடைய வாழ்வு குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பயன் தர வேண்டும்.
* பெற்றோரை விட சிறந்தவர் யாருமில்லை.
* அன்பும், அறிவும் அவை வெளிப்படும்போது மட்டுமே உணர முடியும்.
* பெரியவர்களை கண்டதும் வணங்கு. ஒருபோதும் அலட்சியம் செய்யாதே.
* நியாயமற்ற வழியில் வந்த பணத்தை கையால் தொடாதே.
* எந்தப் பணியிலும் நிதானத்துடன் ஈடுபடு. வெற்றி பெறுவாய்.
* கடவுளை அன்புடன் வணங்கு. அவரிடம் வியாபாரம் செய்யாதே.