உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் புத்தாண்டு : போடி கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டு : போடி கோயில்களில் சிறப்பு வழிபாடு

போடி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, போடி அருகே தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார், சித்திரபுத்திரனார் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


போடி அருகே தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சித்தரை முதல் தேதியில் நடப்பது வழக்கம். இன்று முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. மூலிகை கலந்த தீர்க்க சுனை நீரில் ஏராளமான பக்தர்கள் நீராடி முருகனின் தரிசனம் பெற்றனர். விழாவினை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டன.  போடி - தேனி மெயின் ரோட்டில் உள்ள சித்திரபுத்திரனார் கோயிலில் சித்திரை புத்திரனாருக்கு சிறப்பு பூஜை, அபிஷே கம், தீபாராதனைகள் நடந்தது.


போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராத னைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. ஐயப்பன் கோயிலில் கனிகள் அலங்காரத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !