உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்; விருந்து தயாரிப்புக்கு அழைப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்; விருந்து தயாரிப்புக்கு அழைப்பு

மதுரை: மதுரையில் ஏப்.28ல் நடைபெறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. 27 ஆம் ஆண்டாக நடக்கும் திருக்கல்யாண விருந்துக்காக 12 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பள்ளி வளாகத்தில் பந்தல் அமைக்கப்படுகிறது. காலை 7:00 மணி முதல் இடைவெளி இன்றி விருந்து நடைபெறும். இதற்காக ஏப்.27ல் பள்ளியில் மதியம் 1:00 மணிக்கு சமையலுக்காக காய்கறி வெட்டும் பணி துவங்குகிறது. இச்சேவையில் ஈடுபட விரும்பும் பக்தர்கள் வீட்டில் இருந்து காய்கறி வெட்டும் அரிவாள்மனை மற்றும் கத்தியுடன் வந்து உதவலாம். ஏப்.27 அன்று மாலை 5:00 மணி முதல் மாப்பிள்ளை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் செய்து வருகிறது. நிர்வாகிகள் கூறுகையில், கடந்தாண்டு 1.40 லட்சம் பக்தர்கள் மாப்பிள்ளை விருந்து, திருக்கல்யாண விருந்தில் பங்கேற்றனர். இந்தாண்டு கூடுதலான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !