பழநியில் ஆதிசங்கரர் அவதாரநாள் விழா: புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை
பழநி: பழநியில் தமிழ்நாடு பிராமண ஸமாஜ அலுவலகத்தில் சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பழநி, தமிழ்நாடு பிராமண ஸமாஜ அலுவலகத்தில் சங்கர ஜெயந்தி விழா நடந்தது. மாலை 6:00 மணி முதல் ஆதிசங்கரருக்கு புஷ்பாஞ்சலி, சிறப்பு பூஜைகள், வேத பாராயணம் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிராமண ஸமாஜ மாநில தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பழநி கிளை தலைவர் சுந்தரேசகுருக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்துஅய்யர் பேசுகையில், "அதி புனிதமான ஆதிசங்கரர் ஜெயந்தி தினம் இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியம், வேதாந்த சிந்தனை, சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கிய நாளாகும். சங்கரர் இந்தியா முழுவதும் சமய ஒற்றுமை, வேதாந்தம், பக்தி, தர்மம், ஆகியவற்றை மக்களிடம் பரப்பியவர். இந்திய கலாச்சாரத்தின் அடித்தளமாக விளங்கும் சங்கரர் அவதார நாளை தேசிய அளவில் கொண்டாடுவது நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த வழியாகும். எனவே ஆதி சங்கர ஜெயந்தி தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்குமாறு தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பாக மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.