உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் விசாலாட்சி மற்றும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலம்

பரமக்குடியில் விசாலாட்சி மற்றும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலம்

பரமக்குடி: பரமக்குடி சித்திரை திருவிழாவில் சிவன் கோயில்களில் விசாலாட்சி மற்றும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.


பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி கோயில் உள்ளது. கோயிலில் நந்தி கொடி ஏற்றப்பட்டு சித்திரை திருவிழா நடக்கிறது. ஏப்., 27 அம்மன் தபசு திருக்கோலம் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி கமல வாகனத்தில் மாப்பிள்ளை திருக்கோலத்தில் உலா வந்தார். பின்னர் கோயில் முன்பு பெருமாள், ஈஸ்வரனை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்களின் வேத மந்திரத்திற்கு மத்தியில், விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.  அப்போது ஏராளமான பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் 12:00 மணி தொடங்கி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி அன்னதான குழுவினர் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. 


*இதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சந்திரசேகர சுவாமி மாப்பிளை திருக்கோலத்தில் உலா வந்தார். பின்னர் கோயில் திருக்கல்யாணம் மண்டபத்தில் மீனாட்சி அம்மன், சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டு சிவன் கோயில்களிலும் சுவாமி, அம்பாள் யானை மற்றும் பூ பல்லக்கில் பட்டனப்பிரவேசம் வந்தனர். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !