கோடை வெப்பத்தை தணிக்க உற்சாக குளியல் போட்ட ராமேஸ்வரம் கோயில் யானை
ADDED :2 days ago
ராமேஸ்வரம்: கோடை வெப்பத்தை தணிக்க ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி உற்சாக குளியல் போட்டது.
கோடைகால வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மக்கள் பெரும் சிரமத்துடன் நடமாடுகின்றனர். ராமேஸ்வரம் பகுதியில் சில நாட்களாக வெப்ப சலனம் வீசுவதால், பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் கோயிலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதில் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள யானை ராமலட்சுமி, வெப்ப சலனத்தில் தவித்தது. இந்நிலையில் இன்று கோயில் வளாகத்தில் உள்ள யானை குளியல் தொட்டியில் கோயில் நிர்வாகம் தண்ணீர் நிரப்பியதும், யானை ராமலட்சுமி தொட்டிக்குள் வலம் வந்து உற்சாகமாக குளியல் போட்டது. கோடை வெயில் ஜூன் வரை நீடிக்கும் என்பதால் யானை ராமலட்சுமி தினமும் சவர் பாத் மூலம் குளிக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.