சிவகாளியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி உற்ஸவம்
ADDED :15 hours ago
கீழக்கரை; கீழக்கரை அருகே வைகை புத்தாள கண்மாய் கரையோரம் உள்ள சிவகாளி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. நாள்தோறும் மூலவர் சிவகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மாலையில் விளக்கு பூஜை நடந்தது. பூஜைகளை பூஜகர் முருகன் செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.