உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுக்குப்பம் பூங்கொடியம்மன் கோவிலில் தேரோட்டம்

புதுக்குப்பம் பூங்கொடியம்மன் கோவிலில் தேரோட்டம்

புதுச்சேரி: புதுக்குப்பத்தில் உள்ள பூங்கொடியம்மன் கோவிலில் தேர் திருவிழா நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான புதுக்குப்பம் கிராமத்தில் பூங்கொடி அம்மன் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தேர் திருவிழா மற்றும் தீமிதி உற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வீதிவுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். தொடர்ந்து, அம்மனுக்கு சாகை வார்த்தல், இரவு பூங்கொடியம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இன்று (2ம் தேதி) மாலை 5:30 மணிக்கு திரவுபதி அம்மன் சுவாமி திருக்கல்யாண உற்சவம், 3ம் தேதி மாலை 6:30 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. வரும் 4ம் தேதி மாலை 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு 7:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !