அவிநாசியில் பகவான் புத்தர் ஜெயந்தி விழா
ADDED :10 minutes ago
அவிநாசி: சித்திரை மாத பௌர்ணமி புண்ணிய தினத்தில்,பகவான் புத்தர் அவதார தினம் கொண்டாடப்பட்டது. சுவாமி விவேகானந்தருக்கு 7 வயதாக இருந்த போதே பகவான் புத்தரை பற்றி அறிந்து அவருடைய அன்பு, கருணை, பரோபகாரம் மற்றும் துறவினால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரையே மானசீக குருவாக வைத்து புத்தரின் காட்சியையும் பெற்றார். அதனை முன்னிட்டு திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் நேற்று பகவான் புத்தர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு பூஜை, வழிபாடு, தியானம், தம்மப்பதம் வாசித்தல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.