உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி தேர்த்திருவிழாவில் மாணவர்கள் வேத பாராயணம்

அவிநாசி தேர்த்திருவிழாவில் மாணவர்கள் வேத பாராயணம்

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் சித்திரைத் தேர்த்திருவிழாவில், நாள்தோறும் வேத ஆகமங்களை, பெங்களூரு ஸ்ரீஸ்ரீகுருகுல வேதாகம பாடசாலை மாணவர்கள் பாராயணம் செய்தனர்.

இது குறித்து, பாடசாலை முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவம் கூறியதாவது: பெங்களூரு வேத ஆகம பாடசாலை மாணவர் குழுவினர் ஆண்டுதோறும், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து, தேர்த்திருவிழா யாக சாலை பூஜைகள், திருமுறை வேத ஆகமப்படி செவ்வனே செய்து பயிற்சி பெறுகின்றனர். கொடியேற்றம் துவங்கி, மஞ்சள் நீர் வரை, யாகசாலை பூஜைகள் விமரிசையாக நடக்கின்றன. பாடசாலை மாணவர்கள், வழிபாட்டிலும், பூஜையிலும் பங்கேற்கின்றனர். கடந்த, 40 ஆண்டுகளாக வேத ஆகம முறைப்படி வழிபாடு செய்து வருகிறோம். மாணவர்களும் சிரத்தையுடன் பங்கேற்று பயிற்சியும், இறையருள் பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும், சிவமாக வழிபாட்டு முறையை கொண்டு செல்வதை இறையருளாக கருதி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !