விழுப்புரம் வடபத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை விழா
ADDED :27 minutes ago
விழுப்புரம்: விழுப்புரம் வடபத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாயொட்டி, விளக்கு பூஜை நடந்தது.
விழுப்புரம், வி.மருதுார் பகுதியில் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் கோவிலில், 46ம் ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி, கடந்த 1ம் தேதி அம்மனுக்கு அபிேஷகம் செய்து ஏரிக்கரையில் சக்திகரகம் ஜோடித்து வீதியுலா கொண்டு செல்லப்பட்டது. பின் சாகை வார்த்தலும், விளக்கு பூஜையும் நடந்தது. தொடர்ந்து. தொடர்ந்த 2ம் தேதி அம்மனுக்கு அபிேஷக ஆராதனையைத் தொடர்ந்து, வீதியுலா நடந்தது. 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையல் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்தனர்.