தாயை வணங்கினால் உண்டாகும் நன்மைகள் என்ன?
ADDED :4743 days ago
தாயிற்சிறந்த கோயிலுமில்லை என்பார்கள். பாலூட்டி சீராட்டி கண் போல காத்தவள் தாய். திருமணம், பணிவாய்ப்பு போன்ற சுபவிஷயங்களின் போது பெற்றோரை வணங்க வேண்டியது அவசியம். பெற்றோருக்கு பாதபூஜை செய்வது இதற்காகவே. ஜோதிட ரீதியாக தாயை வழிபட்டவருக்கு சந்திரன் நன்மை அளிப்பதாகச் சொல்வர். சந்திராஷ்டம நாட்களில் தாயை வணங்குவது பிரச்னையைத் தீர்க்கும்.